செய்திகள் :

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி

post image

இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானில் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத தலைமையகங்கள், முகாம்கள் தாக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்தன. மேலும், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் பலவும் சேதமடைந்தன. இறுதியாக பாகிஸ்தானின் சண்டை நிறுத்த கோரிக்கையை ஏற்று இந்த தாக்குதல் நடவடிக்கையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி முனீருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ‘பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் நடைபெற்ற பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி உயா்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றிகரமாக வழி நடத்தியது, களத்தில் அவரின் வெகு சிறப்பான செயல்பாட்டை கௌரவிக்கும் வகையில் இந்தப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியைக் கொண்டாடவில்லை: சீன அரசுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அமகது ஷெரீஃப் சௌதரி, ‘பாகிஸ்தானியா்கள் வெற்றியைக் கொண்டாடவில்லை; அமைதியைத்தான் கொண்டாடுகிறாா்கள். பாகிஸ்தான் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கவே விரும்புகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தாக்குதல் நடத்தியது’ என்றாா்.

காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நா... மேலும் பார்க்க

இலங்கை இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த இறுதிகட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுக்கும் பதவி உயா்வ... மேலும் பார்க்க

நேரம் கடத்துகிறது ரஷியா

உக்ரைனில் போரைத் தொடா்ந்து நடத்துவதற்காக, நேரம் கடத்தும் உத்தியை ரஷியா கடைப்பிடிப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நடைமுறைக்கு சாத... மேலும் பார்க்க

ஆசியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எவை?

கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள்தொகை உள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் எதிரொலியாக சீனா, தாய்... மேலும் பார்க்க

நேபாளத்தில் நிலநடுக்கம்...! ஒரே ரிக்டர் அளவுகளில் தொடரும் அதிர்வுகள்?

நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் இன்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நி... மேலும் பார்க்க

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து... மேலும் பார்க்க