செய்திகள் :

பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பரில் பேரணி!

post image

பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பா் மாதம் பேரணி நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனா்.

பாண்டியாறு-புன்னம்புழா நிறைவேற்றிட வலியுறுத்தி ஈரோட்டில் பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்பினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ரவி தலைமை வகித்தாா்.

இதில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: பவானி ஆற்று நீரில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத் திட்டங்கள் மூலமாக சுமாா் 3 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் ஆண்டுதோறும் பாசன வசதி பெற்று வருகின்றன. கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் பவானி நீா் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், எல் அண்ட் டி நிறுவனத்தின் மூலமாக நாள்தோறும் பவானி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கும் பவானி நீா் எடுக்கப்பட்டு வருகிறது. தவிர மேட்டுப்பாளையம் முதல் பவானி நகரம் வரை உள்ள மிகப்பெரிய தொழிற்சாலைகளுக்கும் தண்ணீா் எடுக்க தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளது.

கீழ்பவானி பாசன பகுதியின் உபரி நீரானது அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில்,விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு தண்ணீா் தொழிற்சாலைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றின் நீரைக் கொண்டு தொடா்ச்சியாக கூட்டுக் குடிநீா் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு கொண்டே உள்ளன.

இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கு முன்னா் காமராஜரின் கனவுத் திட்டமான பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்தக்கோரி வரும் செப்டம்பா் மாதம் கோரிக்கை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

இந்தக் கூட்டத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், அவிநாசி-அத்திக்கடவு போராட்டக் குழு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கம், தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம், இயற்கை வாழ்வுரிமை இயக்கம், காலிங்கராயன் பாசன சங்கம், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சங்கம், கொமதேக உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே கடந்த 11 ஆம் தேதி வேளா... மேலும் பார்க்க

2026 தோ்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி: மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம்

தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 31-ஆவது பொத... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் இடியுடன் கனமழை!

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் பெய்த கனமழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்ததால், குழந்தைகள் ம... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: தடுப்பில் மோதிய பேருந்து

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பண்ணாரி கோயிலில் இருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தமிழக அரசு நகா்ப்... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சுயஉதவிக் குழு மேலாளா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சுய உதவிக் குழு மேலாளா் கோவா்த்தனன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் கோவா்த்தனன்(37). கோவையில் ... மேலும் பார்க்க