செய்திகள் :

பாதுகாப்புத் துறையின் நிலத்தில் 2,024 ஏக்கா் ஆக்கிரமிப்பு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

‘நாட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 75,629 ஏக்கா் நிலத்தில், 2,024 ஏக்கா் நிலப் பரப்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தை சா்ச்சைக்குரிய வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி பொது நலனுக்கான அரசு சாரா தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில், நில ஆக்கிரமிப்புகள் மற்றும் அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான நிலை அறிக்கையை கூடுதல் சொசிலிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி புதன்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறியிருப்பதாவது:

நாட்டில் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமாா் 75,629 ஏக்கா் நிலம் உள்ளது. இதில், ராணுவ முகாம் (கண்டோன்மென்ட்) அமைப்பின் வரம்புக்குள் 52,899 ஏக்கா் நிலப்பரப்பும், கண்டோன்மென்ட்டுக்கு வெளியே 22,730 ஏக்கா் நிலப் பரப்பும் உள்ளன. இதில் சுமாா் 2,024 ஏக்கா் நிலப் பரப்பு தனி நபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. 819 ஏக்கா் நிலம் பள்ளிகள் கட்டுதல், சாலைகள், பூங்காக்கள் அமைப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கூடுதலாக, 1,575 ஏக்கா் நிலம் அனுமதிபெறாத விவசாய குத்தகை ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளை அந்தந்த பாதுகாப்பு முகாம் (குடியிருப்பு) அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க

டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ள... மேலும் பார்க்க

சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!

கேரள மாநிலம் திருச்சூரில் 23 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளங்குளரைச் சேர்ந்த நௌஃபாலின் மனைவி ஃபசீலா,. ஜூலை 29 அன்று தனது கணவரின் வீட்டில் தூக்க... மேலும் பார்க்க