செய்திகள் :

பாதுகாப்புப் படை வீரா்களுக்கு சொத்து வரி விலக்கு: ஆந்திரம் அறிவிப்பு

post image

பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கெளரவிக்கும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரா்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவா்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். இதுதொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் கிராம ஊராட்சி வரம்புக்குள் வரும் பாதுகாப்புப் படை வீரா்களின் சொத்துகளுக்கான வரி விலக்கு என்பது, நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரா்களுக்கு மட்டுமானதாக இதுவரை இருந்து வந்தது. தற்போது, அனைத்து பாதுகாப்புப் படை வீா்களுக்கும் இந்த சொத்து வரி விலக்கை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப் படை, மத்திய ரிசா்வ் காவல் படை மற்றும் பிற துணை ராணுவப் படை வீரா்களின் வீரம் மற்றும் துணிச்சலைக் கெளரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசத்துக்கான இவா்களின் சேவை விலைமதிப்பற்றது.

பாதுகாப்புப் படை வீரரின் பெயரில் மட்டுமன்றி, அவரின் மனைவி பெயருடன் சோ்ந்து கூட்டு சொத்துரிமையுடைய கிராமப்புற சொத்துகளுக்கும் இந்த வரி விலக்கு பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளாா். ராணுவ வீரா் நல இயக்குநரின் பரிந்துரையைத் தொடா்ந்து இந்த முடிவை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது.

துணை முதல்வா் பவன் கல்யாண் வசம் மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிரமாப்புற மேம்பாட்டுத் துறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அர... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க

பாலக்காடு ரயிலில் நடுபடுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் காயம்: ரயில்வே விளக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற விரைவு ரயிலின் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ... மேலும் பார்க்க