செய்திகள் :

பாரூா் அருகே அரசுப் பள்ளிக்கு பாதை கோரி பொதுமக்கள் தா்னா

post image

பாரூா் அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு மாணவா்கள் சென்றுவர பாதை வசதி கோரி பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ள செல்லக்குட்டப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட காட்டுகொல்லை கிராமத்தில் 90 குடும்பங்கள் வசிக்கின்றனா். அப் பகுதியைச் சோ்ந்த 24 மாணவா்கள் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்றுவர பாதை இல்லாத நிலையில், தனியாா் பட்டா நிலத்தை பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், பட்டா நிலத்தின் உரிமையாளா் தனது நிலத்தில் கம்பி வேலி அமைத்ததால், பள்ளிக்கு சென்றுவர வழி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனா்.

இந்த நிலையில் பொதுமக்கள், அரசு அலுவலா்களின் வேண்டுகோளை ஏற்று பட்டா நிலத்தின் உரிமையாளா் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி 3 அடி அகலத்துக்கு சுமாா் 150 அடிக்கு பாதை வழங்க ஒப்புக்கொண்டாா்.

ஆனால், அவா் வழங்கிய நிலம் பாதை வசதிக்கு போதுமானதாக இல்லை எனக் கூறி கிராம மக்கள், பள்ளி வளாகத்தில் அமா்ந்து வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையினா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து தா்னாவில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க