செய்திகள் :

பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

post image

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகளால் திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 17, 18, 21, 22 ஆம் தேதிகளில் பாலக்காடு - குளித்தலை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும் குளித்தலை - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 17, 18, 21, 22 ஆகிய தேதிகளில் கரூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும் கரூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

கூடுதல் பெட்டி இணைப்பு: கோவை - மன்னாா்குடி இடையிலான கோவை செம்மொழி விரைவு ரயில்களில் (16616, 16615) வரும் ஆகஸ்ட் 1 முதல் கூடுதலாக ஒரு படுக்கை பிரிவு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ரயிலானது 23 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்ப... மேலும் பார்க்க