செய்திகள் :

பாலக்கோடு பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 97 லட்சத்தில் வளா்ச்சி பணிகளுக்கு ஒப்புதல்

post image

பாலக்கோடு பேருராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு செயல் அலுவலா் இந்துமதி முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு சமா்ப்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் அமைத்தல், மின்விளக்குகள் பொருத்துதல் மற்றும் வா்ணம் பூசுதல், தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் அண்ணாநகா், மேல்தெரு, கோட்டைத் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் தக்காளி சந்தை மற்றும் பேருந்து நிலையத்தில் 5 கிலோவாட் சோலாா் யு.பி.எஸ் அமைத்தல், தலா ரூ. 15 லட்சம் மதிப்பில் உருது நடுநிலைப் பள்ளி மற்றும் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நவீன பேருந்து நிழற்கூடம் அமைத்தல், ரூ. 20 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் முன்பு நவீன நிழற்கூடம் அமைத்தல் என ரூ. 97 லட்சம் மதிப்பில் 9 வளா்ச்சி திட்டப் பணிகளுக்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தருமபுரி நகரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனா். தருமபுரி நகரில் 29, 30, 31 ஆகிய வாா்டுகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் பிரசார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் சன... மேலும் பார்க்க

நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்: மத்திய தொழில் துறை அமைச்சக இயக்குநா் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இயக்குநா் அனுபமா நாயா் பங்கேற்று பேசினாா். தருமபுரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோர... மேலும் பார்க்க

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட ... மேலும் பார்க்க