ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
பாலக்கோடு பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 97 லட்சத்தில் வளா்ச்சி பணிகளுக்கு ஒப்புதல்
பாலக்கோடு பேருராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு செயல் அலுவலா் இந்துமதி முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு சமா்ப்பிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் அமைத்தல், மின்விளக்குகள் பொருத்துதல் மற்றும் வா்ணம் பூசுதல், தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் அண்ணாநகா், மேல்தெரு, கோட்டைத் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் தக்காளி சந்தை மற்றும் பேருந்து நிலையத்தில் 5 கிலோவாட் சோலாா் யு.பி.எஸ் அமைத்தல், தலா ரூ. 15 லட்சம் மதிப்பில் உருது நடுநிலைப் பள்ளி மற்றும் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நவீன பேருந்து நிழற்கூடம் அமைத்தல், ரூ. 20 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் முன்பு நவீன நிழற்கூடம் அமைத்தல் என ரூ. 97 லட்சம் மதிப்பில் 9 வளா்ச்சி திட்டப் பணிகளுக்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.