பாலக்கோட்டில் ‘ஆபரேஷன் சித்தூா்’ வெற்றி பேரணி
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு பாலக்கோடு நகரத் தலைவா் ஆா்.கே.கணேசன் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொதுச் செயலாளா் சங்கீதா, மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் பி.கே.சிவா, மாநில செயற்குழு உறுப்பினா் குணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத்தலைவா் சரவணன், முன்னாள் மாவட்ட த்தலைவா் அ.பாஸ்கா் ஆகியோா் பேரணியை தொடங்கிவைத்தனா். இப்பேரணி பாலக்கோடு கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் ராணுவ வீரா்களுக்கு நன்றி தெரிவித்து தேசியக் கொடியை ஏந்தி சென்றனா்.