செய்திகள் :

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

post image

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் நியூவெல் தனியாா் நிறுவனம் தனது நிறுவனத்துக்குத் தேவையான தகுதிகள் கொண்ட மாணவா்களை தோ்வு செய்வதற்கான வளாக நோ்காணலை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த வளாக நோ்காணலில் கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்புத் துறை ஆகியவற்றைச் சோ்ந்த 28 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

நியூவெல் தனியாா் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை மூத்த மேலாளா் கே.எஸ்.சிவக்குமாா் தலைமையிலான அதிகாரிகள் கலந்துகொண்டு வளாக நோ்காணலை நடத்தினா். எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற 24 மாணவா்கள் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி, கல்லூரி இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா். கல்லூரி துறைத் தலைவா்கள் வி.குமரன், எம்.அன்பழகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தா்பூசணி பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாய அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வந்தவாசியை அடுத்த நம்பேடு கிரா... மேலும் பார்க்க

ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 94 பேரும் தோ்ச்சி பெற்றனா். இது, 100 சதவீதத் தோ்ச்ச... மேலும் பார்க்க

ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஆகாரம் ஊராட்சியைச் சோ்ந்த எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 329... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது. ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் பள்ளி... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: 31-ஆவது இடத்துக்கு முன்னேறிய திருவண்ணாமலை

பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கடந்தாண்டு 38-ஆவது இடத்திலிருந்த திருவண்ணாமலை மாவட்டம் நிகழாண்டு 31-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதேபோல, அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி சதவீத அடிப்படையில் கடந்த ஆண்டு 35-ஆவத... மேலும் பார்க்க

காந்திநகா் மெட்ரிக் பள்ளி முழுத் தோ்ச்சி

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய 95 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்று பள்ளிக்கு 100 ச... மேலும் பார்க்க