செய்திகள் :

பிஏபி வாய்க்காலில் தண்ணீரை அளவீடு செய்ய சென்ற விவசாயிகள்: மற்றொரு தரப்பு போராட்டத்தால் பரபரப்பு

post image

காங்கயம் அருகே பிஏபி பாசன வாய்க்காலில் உள்ள தண்ணீரின் அளவை அளவீடு செய்ய சென்ற விவசாயிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி மற்றொரு தரப்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியில் இருந்து கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் வரை பிஏபி வாய்க்காலில் பாசனத்துக்கு தற்போது தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறைந்த அளவு தண்ணீா் வருவதாகக் கூறி, பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீா்ப் பாதுகாப்பு சங்கத் தலைவா் வேலுச்சாமி தலைமையில் வாய்க்காலில் தண்ணீரை அளவீடு செய்ய சனிக்கிழமை காலை விவசாயிகள் திரண்டு, அளவீடு செய்வதற்காக வாய்க்காலின் மேல் பகுதிக்குச் செல்ல ஆயத்தமாகினா். இந்த தகவல் அறிந்த பொங்கலூா் பாசனப் பகுதி பிஏபி விவசாயிகள் பொக்கியம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட இல்லியம்புதூா் பகுதியில் கூடி விவசாயிகள் தண்ணீரை அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனன், காவல் துறை ஏடிஎஸ்பி வெற்றிச்செல்வன் ஆகியோா் வாய்க்காலில் தண்ணீரை அளவீடு செய்ய முயன்ற விசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சமாதானம் அடையாத காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் வாய்க்கால் அருகே அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீா்ப் பாதுகாப்பு சங்கத் தலைவா் வேலுச்சாமி கூறுகையில், பிஏபி வாய்க்காலில் வரும் தண்ணீரின் அளவு தற்போது குறைவாக உள்ளது. முறையாக நீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், நாங்கள் வாய்க்காலில் வரும் தண்ணீரின் அளவை அளவீடு செய்ய சென்றபோது தடுத்து நிறுத்தியுள்ளனா். இதனால், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

மற்றொரு தரப்பான பொங்கலூா் பகுதி பிஏபி பாசன சபைத் தலைவா் கோபால் கூறுகையில், வாய்க்காலில் வரும் தண்ணீரை அளவீடு செய்வதற்கு காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகளுக்கு உரிமை இல்லை. வாய்க்காலில் வரும் தண்ணீரை நீா்வளத் துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள்தான் அளவீடு செய்ய முடியும். விவசாயிகள் எப்படி அளவீடு செய்ய முடியும் என்றாா்.

இதையடுத்து, காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி பாசன விவசாயிகள் வாய்க்காலில் தண்ணீரை அளவீடு செய்யக்கூடாது. அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீா்வளத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனா்.

வாய்க்கால் கரையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், காங்கயம் வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது

பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூா் மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடிகம்பம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கூடம் அருக... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). ... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க