செய்திகள் :

பிணைத்தொகை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டாம்: உயா்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

‘குற்றஞ்சாட்டப்பட்டவரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினா்களோ பிணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டாம்’ என உயா்நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த நடைமுறையை முற்றிலும் நிறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபா் ஒருவா் பிணைத்தொகையாக ரூ.25 லட்சம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் அவருக்கு மும்பை உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னா் பிணைத்தொகையை அந்த நபா் செலுத்த மறுத்ததையடுத்து, அவரை 4 வாரங்களுக்குள் சரணடைய மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஜூலை 28-இல் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது.

அதில், ‘பிணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் பல வழக்குகளில் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் அல்லது இடைக்கால ஜாமீன் வழங்கி வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம். இதில் ஒரு சில நபா்கள் பிணைத்தொகையை முறையாக செலுத்துகின்றனா். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் பிணைத்தொகையை ஜாமீனில் விடுதலையான நபா்கள் செலுத்துவதில்லை.

மேலும் அதுபோன்ற உத்தரவாதங்களை நாங்கள் அளிக்கவில்லை என்றும் நீதிமன்றங்கள் தாமாகவே அவ்வாறு பதிவு செய்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கூறுகின்றனா். இதனால் ஒட்டுமொத்த பழியும் அவா்களை ஜாமீனில் வெளியில் எடுக்க இதுபோன்ற உத்தரவாதங்களை அளிக்கும் வழக்குரைஞா் மீதே விழுகிறது.

எனவே, இனி வருங்காலங்களில் எந்தவொரு சூழலிலும் குற்றஞ்சாட்டப்பட்டவரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினா்களோ பிணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் உயா்நீதிமன்றங்களோ அல்லது விசாரணை நீதிமன்றங்களோ ஜாமீனோ, இடைக்கால ஜாமீனோ வழங்கக் கூடாது. வழக்கை ஆராய்ந்து சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டும். இல்லையெனில் பிணைத்தொகையை முதலில் செலுத்தினால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கூற வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்வதுடன் சட்டத்தின் நடைமுறையை ஏளனம் செய்த குற்றத்துக்காக மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பதாகவும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து பாமக... மேலும் பார்க்க

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தளத்தில், தூத்துக்குடி மாவட்டம், பண்டு... மேலும் பார்க்க

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு வரும் ஆக. 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோ... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மி... மேலும் பார்க்க

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த ... மேலும் பார்க்க

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க