பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து
திருப்பூா் பின்னலாடை நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா், ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளியப்பன். இவா் அங்குள்ள ஜெய் நகா் பகுதியில் 3 மாடிக் கட்டடத்தில் குழந்தைகளுக்கான பின்னலாடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை வழக்கம்போல பணி நிறைவடைந்து தொழிலாளா்கள் நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனா்.
இந்நிலையில், அந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீப்பிடித்து
எரிந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், வள்ளியப்பன் மற்றும் திருப்பூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து திருப்பூா் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 22 தீயணைப்பு வீரா்கள் அங்கு விரைந்தனா். சுமாா் 4 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டதால் தரைதளத்துடன் தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மற்ற 2 தளங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடைகள், துணி வகைகள், இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து தொடா்பாக நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.