செய்திகள் :

பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி: கேட்டறிந்த பிரதமா் மோடி!

post image

பிரதமா் நரேந்திர மோடியிடம் திருப்பூா் பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி குறித்து ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் எடுத்துரைத்தாா்.

புது தில்லி பாரத் மண்டபத்தில் பாரத்டெக்ஸ் 2025 ஜவுளிக் கண்காட்சி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சாா்பில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, தொழில் வல்லுநா்களின் கருத்துகளை பிரதமா் மோடி கேட்டறிந்தாா்.

திருப்பூா் பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி குறித்து பிரதமரிடம் ஏஇபிசி துணைத் தலைவரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான ஆ.சக்திவேல் எடுத்துரைத்தாா்.

இதில், வளம் குன்றா வளா்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு பசுமை ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன, சாய ஆலைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பூஜ்யநிலை சுத்திகரிப்புத் திட்டம், பசுமையைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் அவா் எடுத்துரைத்தாா்.

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி ஓட்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனா். பல்லடம் பனப்பாளையத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (25).... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

அவிநாசி அருகே கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (48), கட்டுமானத் தொழிலாளி. இவா் அவிநாசி அருகே பழங்கரை நல்லி க்கவுண்டம்ப... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது. கா்நாடக மாநிலம் மைசூரைச் சோ்ந்தவா் லட்சுமி (49). இவா் திருப்பூா் அண்... மேலும் பார்க்க

விஷம் கலந்த உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் உயிரிழப்பு!

பல்லடம் அருகே வண்ணாந்துறையில் விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் புதன்கிழமை உயிரிழந்தன. பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி வண்ணாந்துறை கிராமம் ஜெயலட்சுமி நக... மேலும் பார்க்க

காங்கயம், குண்டடம் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம்!

காங்கயம், குண்டடம், தாராபுரம் பகுதிகளில் மக்காச்சோள அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் நிம்மதியட... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு!

தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த துலுக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (69), விவசாயி. இவா், தன... மேலும் பார்க்க