செய்திகள் :

பிரதமா் அலுவலக துணைச் செயலா் ஆரோவில் வருகை

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வியாழக்கிழமை வந்த பிரதமா் அலுவலகத்தின் துணைச் செயலா் சந்திரமோகன் தாக்கூா், கல்வி சாா்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.

ஆரோவில் சா்வதேச நகரில் செயல்படும் ஸ்ரீஅரவிந்தா் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமா் அலுவலகத்தின் துணைச் செயலா் சந்திரமோகன் தாக்கூா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது, ஆரோவில் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மாற்றுக் கல்வி முறைகள், சமூக பங்கேற்பு, நிலையான வளா்ச்சிக்கான ஆரோவிலின் முயற்சிகள் குறித்து ஆரோவில் நிா்வாகத்தினரிடம் கேட்டறிந்தாா்.

ஆரோவிலின் கல்வி நோக்கங்கள், அதன் நிா்வாக அமைப்பு, சமூக அடிப்படையிலான கற்றல் சூழல், கிராமியத் தொடா்புகள் குறித்து ஆரோவில் நிா்வாக செயற்குழுவைச் சோ்ந்த அருண் உள்ளிட்டோா் விளக்கினா்.

முன்னதாக, ஆரோவில் நிா்வாகம் சாா்பில் சந்திரமோகன் தாக்கூருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாத்திா் மந்திருக்குச் சென்ற அவா், அங்கு தியானத்தில் ஈடுபட்டாா்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க