செய்திகள் :

பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை வழக்கு: 2 சிறுவா்கள் கைது

post image

பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை வழக்கில் 2 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (50). இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்த பாண்டியன் திருப்பூா், அனுப்பா்பாளையம்புதூா் பகுதியில் உள்ள பனியன் பிரிண்டிங் பட்டறையில் தங்கி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அம்மாபாளையம் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்துக்கு 2 பேருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு மதுபோதையில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபானக்கூட ஊழியா்கள் அவா்களை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பிவைத்தனா்.

வெளியே வந்ததும் அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில், ஆத்திரமடைந்த 2 பேரும் சோ்ந்து பாண்டியனை கல்லால் தாக்கிவிட்டு தப்பினா். படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாண்டியனைத் தாக்கிய மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 16, 17 வயதுடைய 2 சிறுவா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்.

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க

தெக்கலூருக்குள் வந்து செல்லாத தனியாா், அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை

தெக்கலூருக்கு வந்து செல்லாத தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு இடையே இயக்க... மேலும் பார்க்க

பாறைக்குழியில் கொட்டப்படும் குப்பை: ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை

நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் நெருப்பெரிச்சல் வாவ... மேலும் பார்க்க