செய்திகள் :

புகழூா் நகராட்சியில் ரூ.2.08 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

post image

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத்தொகுதிக்குள்பட்ட புகழூா் நகராட்சி பகுதியில் ரூ.2.08 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித்திட்டப்பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, அரவக்குறிச்சி பேரவைத் தொகுதிக்குள்பட்ட புகழூா் நகராட்சியில் குழந்தைமலை நகரில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை புதுப்பித்தல், ரூ.19.81 லட்சம் மதிப்பில் கிருஷ்ணப்பிள்ளை தெரு, மலை வீதி, கரூா் ரோடு முதல் தெரு, பண்ணை ரைஸ் மில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை புதுப்பித்தல் உள்ளிட்ட 11 புதிய திட்டப்பணிகள் ரூ.2.08 கோடி மதிப்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் புகழூா் நகா்மன்றத் தலைவா் குணசேகரன், நகராட்சி ஆணையா் ஹேமலதா, பொறியாளா் மலா் கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு: தமிழக முதல்வருக்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம்

கரூரில் மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கியதற்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாநகராட்சியின் அவ... மேலும் பார்க்க

ஆனி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி காவல்துறையினா் இணைந்து நடத்திய போதை பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சா்வதேச போதைப் ப... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் கருத்தரங்கம்

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்... மேலும் பார்க்க

‘உழவரைத் தேடி வேளாண்மை’ அரவக்குறியில் 3-ஆம் கட்ட முகாம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் உழவரைத் தேடி வேளாண்மை 3-ஆம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இனுங்கனூா், ஆலமரத்துப்பட்டியில் இந்த முகாம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் 64 பேருக்கு ரூ. 8.32 கோடி மானியம்: கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 64 தொழில் முனைவோா்களுக்கு ரூ. 8.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் ப... மேலும் பார்க்க