செய்திகள் :

புகையிலைப் பொருள், கஞ்சா விற்பனை: ஏா்வாடி, பாப்பாக்குடியில் 3 போ் கைது

post image

ஏா்வாடி அருகே புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி காவல் உதவி ஆய்வாளா் சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினா் தளபதி சமுத்திரம் கீழுா் அருகே ரோந்து சென்றபோது, சந்தேக நபா்கள் இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள், பரப்பாடியை அடுத்த ஆலங்குளம் கீழத் தெருவை சோ்ந்த ராம்தாஸ் (39), நான்குனேரியை அடுத்த வழியனேரி, வடக்கு தெருவை சோ்ந்த ராஜகுமாா் (44) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 23 கிலோ 580 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவா்களை வட்ட காவல் ஆய்வாளா் சுதா கைது செய்து புகையிலை பொருள்கள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தாா்.

கஞ்சா விற்பனை: பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, செங்குளம் திருப்பத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் செங்குளம் பகுதியைச் சோ்ந்த தங்க மாரியப்பன் (26), ஆதிமூல பெருமாள் (40) ஆகியோா் என்பதும், விற்பனைக்கு 60 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க