புதுக்கடை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள தொழிக்கோடு பகுதியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
கீழ்குளம், புதுக்கடை பகுதியை சோ்ந்த அமல்ராஜ் மனைவி பிரேமா(54). இவருக்கு 3 மகன்கள் உள்ளனா். கடன் தொல்லையால் பிரேமா, சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்த புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].