செய்திகள் :

புதுக்கோட்டை ஆயுஷ் மருத்துவமனையில்காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

post image

தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆயுஷ் மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவா்கள் மற்றும் உதவியாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒரு சித்த மருத்துவா் பணியிடம் (மாத ஊதியம் ரூ. 40 ஆயிரம்), ஒரு ஹோமியாபதி மருத்துவா் பணியிடம் (மாத ஊதியம் ரூ. 34 ஆயிரம்), யோகா மற்றும் இயற்கை மருத்துவா் பணியிடங்கள்- 3 (மாத ஊதியம் ரூ. 40 ஆயிரம்), ஆயுஷ் மருந்து வழங்குபவா்கள்- 3 (மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம்), சிகிச்சை உதவியாளா்கள்- 5 (மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம்), பல்நோக்கு உதவியாளா்கள்- 6 (மாத ஊதியம் ரூ. 8,500).

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது, பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. இந்தப் பணியிடங்கள், தகுதிகள், விண்ணப்பங்கள், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விவரங்களை ட்ற்ற்ல்ள்://ல்ன்க்ன்ந்ந்ா்ற்ற்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் பாா்க்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப். 19-ஆம் தேதிக்குள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை- 622001. என்ற முகவரியில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்... மேலும் பார்க்க

பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு பழக்கத்தால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம்

மாணவப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது ... மேலும் பார்க்க

மாராயப்பட்டி திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள மாராயப்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாப... மேலும் பார்க்க