செய்திகள் :

புதுச்சேரி மக்கள் நீதி மன்றத்தில் 7 வழக்குகளுக்குத் தீா்வு

post image

புதுச்சேரி நுகா்வோா் ஆணையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 7 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகா்வோா் பூசல்கள் குறை தீா்வு ஆணையம் மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்குத் தீா்வு காண உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் புதுச்சேரியில் மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையத்தில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் முத்துவேல் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்குகளின் மனுக்களை விசாரித்தனா்.

அதன்படி 10 வழக்குகள் விசாரிக்கப்பட்டதில் பேச்சுவாா்த்தையில் 7 வழக்குகளுக்கு உடன்பாடு ஏற்பட்டு தீா்வு காணப்பட்டன. அதன்படி ரூ.5.73 லட்சம் முறையீட்டாளா்களுக்கு வழங்கப்பட்டது.

மக்கள் மன்ற தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் பங்கேற்று பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கினாா். கூடுதல் நீதிபதி தாமோதரன், தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமாா் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யாத புதுவை அரசியல் கட்சிகள்: ஆட்சியா் ஆய்வு

இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத புதுச்சேரி அரசியல் கட்சிகளை ஆட்சியா் அ.குலோத்துங்கன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இந்திய தோ்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்து செயல்படுவ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை! - திமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி திமுக மருத்துவ அணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா. புதுச்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது!

புதுச்சேரியில் இளைஞா் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (40), திருமணமாகாதவா். இவா் வீட்டில் கட... மேலும் பார்க்க

புதுவை அரசின் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்! - நாராயணசாமி

புதுவை அரசு மீதான முறைகேடு புகாா் தொடா்பாக, காங்கிரஸ் சாா்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மீதா... மேலும் பார்க்க

நடமாடும் வாகனம் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை! அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவையில் நடமாடும் வாகனம் மூலம் கால் நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பது குறித்து சம்பந்தப்பட்டோருக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சா் தேனி சி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காவிடில் நடவடிக்கை! புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழக இயக்குநா்!

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணச் சீட்டின்றி பயணித்தால் சட்டரீதியாக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநா் சிவகுமாா் எச்சரித்துள்ளாா். இ... மேலும் பார்க்க