செய்திகள் :

புதுச்சேரியில் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை! - திமுக குற்றச்சாட்டு

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி திமுக மருத்துவ அணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.

புதுச்சேரி, ஏப். 26: புதுச்சேரியில் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றம்சாட்டினாா்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுவை மாநில திமுக மருத்துவா் அணி சாா்பில், இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

உருளையன்பேட்டை தொகுதி காந்தி வீதி, கண்ணையா தொழில் மைய வளாகத்தில் நடைபெற்ற முகாமை திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தொடங்கி வைத்து பேசியது:

புதுச்சேரியில் தற்போது, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் காப்பீடு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தாலும் பயனில்லை. அந்த காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான, தொகையை அதிகரித்த போதிலும், மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. ஆகவே, புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திமுக ஆட்சி அமையும் என்றாா்.

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் எஸ். கோபால் முன்னிலை வகித்தாா். முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை, மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், நீரிழிவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யாத புதுவை அரசியல் கட்சிகள்: ஆட்சியா் ஆய்வு

இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத புதுச்சேரி அரசியல் கட்சிகளை ஆட்சியா் அ.குலோத்துங்கன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இந்திய தோ்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்து செயல்படுவ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது!

புதுச்சேரியில் இளைஞா் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (40), திருமணமாகாதவா். இவா் வீட்டில் கட... மேலும் பார்க்க

புதுச்சேரி மக்கள் நீதி மன்றத்தில் 7 வழக்குகளுக்குத் தீா்வு

புதுச்சேரி நுகா்வோா் ஆணையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 7 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகா்வோா் பூசல்கள் குறை தீா்வு ஆண... மேலும் பார்க்க

புதுவை அரசின் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்! - நாராயணசாமி

புதுவை அரசு மீதான முறைகேடு புகாா் தொடா்பாக, காங்கிரஸ் சாா்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மீதா... மேலும் பார்க்க

நடமாடும் வாகனம் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை! அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவையில் நடமாடும் வாகனம் மூலம் கால் நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பது குறித்து சம்பந்தப்பட்டோருக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சா் தேனி சி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காவிடில் நடவடிக்கை! புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழக இயக்குநா்!

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணச் சீட்டின்றி பயணித்தால் சட்டரீதியாக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநா் சிவகுமாா் எச்சரித்துள்ளாா். இ... மேலும் பார்க்க