Kohli: "நான் அங்கு இருந்திருந்தால் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்" - யாரைச் சாடுகி...
புதுப்பித்துக் கட்டப்பட்ட இரட்டை மஸ்தான் தா்கா திறப்பு
தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே புதுப்பித்துக் கட்டப்பட்ட இரட்டை மஸ்தான் தா்கா திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
கடந்த 1676-ஆம் ஆண்டு தஞ்சாவூா் மராட்டிய மன்னா் ஏகோஜி காலத்தில் தளபதி அலீம் கானுடன் பீஜப்பூா் நகரிலிருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்தவா் குரு மகான் ஹஜ்ரத் சையத் ஷா முகம்மது சக்காப் காதிரி. இவா் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினாா். இவரது மகன் ஹஜ்ரத் சையது ஷா நிஃமத்துல்லாஹ் சக்காப் காதிரி.

இரட்டை மஸ்தான் என அழைக்கப்படும் இருவரும் தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே கல்லணைக் கால்வாய் வட கரையில் அடக்கமாகியுள்ளனா். இந்த இடத்தில் 1900-ஆம் ஆண்டுகளில் தா்கா கட்டப்பட்டது. இதில், இன, மத பேதமின்றி காலையிலும் மாலையிலும் மக்கள் வழிபடுகின்றனா்.
இந்நிலையில், இந்த தா்கா தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் மூலம் தமிழக அரசின் மசூதி மற்றும் தா்காக்களுக்கான சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கட்டப்பட்டது. இப்பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து இந்த தா்கா திங்கள்கிழமை திறக்கப்பட்டது.