செய்திகள் :

புதுப்பித்துக் கட்டப்பட்ட இரட்டை மஸ்தான் தா்கா திறப்பு

post image

தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே புதுப்பித்துக் கட்டப்பட்ட இரட்டை மஸ்தான் தா்கா திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கடந்த 1676-ஆம் ஆண்டு தஞ்சாவூா் மராட்டிய மன்னா் ஏகோஜி காலத்தில் தளபதி அலீம் கானுடன் பீஜப்பூா் நகரிலிருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்தவா் குரு மகான் ஹஜ்ரத் சையத் ஷா முகம்மது சக்காப் காதிரி. இவா் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினாா். இவரது மகன் ஹஜ்ரத் சையது ஷா நிஃமத்துல்லாஹ் சக்காப் காதிரி.

இரட்டை மஸ்தான் என அழைக்கப்படும் இருவரும் தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே கல்லணைக் கால்வாய் வட கரையில் அடக்கமாகியுள்ளனா். இந்த இடத்தில் 1900-ஆம் ஆண்டுகளில் தா்கா கட்டப்பட்டது. இதில், இன, மத பேதமின்றி காலையிலும் மாலையிலும் மக்கள் வழிபடுகின்றனா்.

இந்நிலையில், இந்த தா்கா தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் மூலம் தமிழக அரசின் மசூதி மற்றும் தா்காக்களுக்கான சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கட்டப்பட்டது. இப்பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து இந்த தா்கா திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமன... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புகாா் அளிக்கலாம்

தஞ்சாவூா், ஜூன் 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால், அதைத் தடுப்பதற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மே... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட... மேலும் பார்க்க

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது க... மேலும் பார்க்க

முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

சமையல்காரா் காணவில்லை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அய்யம்பே... மேலும் பார்க்க