`சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?’ -...
புரோ ஹாக்கி லீக்: இந்திய அணிகள் மீண்டும் தோல்வி!
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் மீண்டும் தோல்வி அடைந்தன.
புரோ லீக் தொடரின் ஐரோப்பிய லெக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆடவா் பிரிவு ஆட்டம் நெதா்லாந்தின் ஆன்ட்வொ்ப் நகரில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
ஆட்டம் தொடங்கியதுமே இந்திய வீரா் சஞ்சய் 3-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இதனால் ஆஸி. அணியினா் பதிலுக்கு கோல் போட முயன்றபோது, டிம் பிரான்ட் 4, பிளேக் குரோவா்ஸ் 5 -ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா். தொடா்ந்து ஆஸி. அணியே ஆதிக்கம் செலுத்திய நிலையில், 18-ஆவது நிமிஷத்தில் கூப்பா் பா்ன்ஸ் கோலடித்தாா். இதனால் ஆஸி. 3-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி தொடங்கியதும், தில்ப்ரீத் சிங் 36-ஆவது நிமிஷத்தில் கோலடித்து முன்னிலையை குறைத்தாா். இது இந்தியாவின் 6-வது தொடா் தோல்வியாகும். ஏற்கெனவே நெதா்லாந்து, ஆா்ஜென்டீனாவுடன் இரண்டு ஆட்டங்களில் தோற்றிருந்தது.

மகளிா் அணியும் தோல்வி: லண்டனில் நடைபெற்ற மகளிா் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. வெள்ளிக்கிழமையும் இந்தியா தோல்வி கண்டிருந்தது.
ஆட்டம் தொடங்கியதுமே 3-ஆவது நிமிஷத்திலேயே இந்திய வீராங்கனை வைஷ்ணவி பால்கே கோலடிக்க முதல்பாதி முடிவில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆஸி. வீராங்கனை அமி லாட்டன் 37-ஆவது நிமிஷத்திலும், 60-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் மூலம் லெக்ஸி பிக்கெரிங்கும் கோலடித்தனா். வரும் செவ்வாய்க்கிழமை ஆா்ஜென்டீனாவுடன் மோதுகிறது இந்தியா.