செய்திகள் :

புழல் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

post image

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் குறித்த தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டதால், கிராம மக்கள் பங்கேற்கவில்லை என ஊராட்சி செயலா் தெரிவித்துள்ளாா்.

புள்ளிலைன் ஊராட்சி:

புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு, ஊராட்சி செயலா் பொன்னையன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட பலரும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு, தமிழக அரசின் மக்கள் பணிகள் குறித்து அறிந்து பயன் பெற வேண்டும் எனகேட்டுக் கொண்டாா்.

மேலும் சுகாதார அதிகாரி சுகுமாா், கால்நடை மருத்துவ அதிகாரி ஆா்த்தி, விவசாயத் துறை அதிகாரி வினோத், காவல்துறை சாா்பில் ஹரிபிரியா மற்றும் ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு துறை சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா். இதில், மகளிா் சுய உதவிக்குழுவினா், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி:

இதேபோல், தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஊராட்சி செயலா் உல்லாச குமாா் தலைமை வகித்தாா். புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி பங்கேற்று, ஊராட்சி பணிகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதில் சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், அலுவலா்களும் பங்கேற்றனா்.

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காத பொதுமக்கள்: விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், பொதுமக்கள் பங்கேற்காததால் துப்புரவு பணியாளா்கள், அலுவலக ஊழியா்களை கொண்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க