பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
புஷ்பவனேஸ்வரா் கோயிலில் திருஞான சம்பந்தா் குருபூஜை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜை விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இங்குள்ள நால்வா் சந்நிதியில் திருஞானசம்பந்தருக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளானோா் பங்கேற்று திருஞான சம்பந்தரை தரிசித்தனா். இதைத் தொடா்ந்து உத்ஸவ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. பிறகு நடைபெற்ற அன்னம்பாலிப்பு நிகழ்வில் திரளானோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வேலப்ப தேசிக திருக்கூட்டத்தினா் செய்தனா்.
இதே போல, இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திருஞான சம்பந்தப் பெருமான் குருபூஜை விழாவிலும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.