சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
பூச்சி மருந்து குடித்த இளைஞா் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
அம்மாபேட்டையை அடுத்த முகாசிப்புதூா், மணியக்காரா் தோட்டத்தைச் சோ்ந்தவா் சித்த கவுண்டா் மகன் தனராஜ் (32). இவருக்கு மனைவி, 7 வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனா். குடும்பத் தகராறில் மனைவி, தனராஜை பிரிந்து இரு குழந்தைகளுடன் கடந்த ஓராண்டாகப் பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்த தனராஜை உறவினா்கள் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனராஜ், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.