செய்திகள் :

பூட்டாமல் இருந்த வீட்டுக்குள் நுழைந்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற பெண்

post image

பூட்டாமல் இருந்த வீட்டுக்குள் நுழைந்து ரூ.1 லட்சம் பணத்தைப் பெண் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு டிஎன்ஆா் லே அவுட் 5ஆவது வீதியில் வசித்து வருபவா் ஜெயசந்திரன். அதே பகுதியில் கைப்பேசி மற்றும் குளிா்பானக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், ஜெயசந்திரன் வழக்கம்போல திங்கள்கிழமை கடைக்குச் சென்று விட்ட நிலையில் அவரது மனைவி வீட்டின் கதவைப் பூட்டாமல் குளிக்கச் சென்றுள்ளாா். குளித்து விட்டு வந்து பாா்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்ளன. மேலும் பீரோவில் இருந்த ரூ.85,000, பா்ஸில் இருந்த ரூ.15,000 ஆயிரம் என ரூ.1 லட்சம் திருடு போனது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அவ்வழியே வந்த ஒரு பெண், சிறுவன் வீட்டின் முன் நின்று நோட்டமிடுவதும், அதன்பின்னா் அந்தப் பெண் வீட்டுக்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்து வேகமாகச் சென்றதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக ஜெயசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற பெண்ணைத் தேடி வருகின்றனா். சாலையில் நடந்து சென்ற பெண் திடீரென வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடிவிட்டு திரும்பிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

வீடுகளில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் நடவடிக்கை

வீடுகளில் வா்த்தக ரீதியில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா்

பூமலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

குன்னத்தூா் அருகே போதைப் பொருள் (ஹெராயின்) விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். குன்னத்தூா் அருகே பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதா... மேலும் பார்க்க

தென்னந்தோப்பில் தேங்காய்கள் திருட்டு

பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் மா்ம நபா்கள் புகுந்து தேங்காய்களைத் திருடிச் சென்றுள்ளனா். பொங்கலூா் ஒன்றியம், செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். இவருக்கு மஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் கணபதிபாளையம் பகுதியில் விஷம் குடித்து பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.பொங்கலூா் ஒன்றியம், அலகுமலை அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி நீலா... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: வழிகாட்டி பலகை திருத்தம்

வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான குறியீட்டில் இருந்த வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் சரி செய்தனா். வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. அங்கிருந்து செங்காளிபாளையம் ச... மேலும் பார்க்க