செய்திகள் :

வீடுகளில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் நடவடிக்கை

post image

வீடுகளில் வா்த்தக ரீதியில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீடுகளில் வா்த்தக ரீதியில் சோப்பு, முக பவுடா், உதட்டு சாயம் போன்ற அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கக் கூடாது. அதற்கென தனி இடம் இருக்க வேண்டும். அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புத் தேதி, சோ்க்கப்பட்ட பொருள்களின் விவரம், முழு முகவரி, உரிமம் குறித்த தகவல்கள் இடம் பெற வேண்டும்.

முறையான அங்கீகாரம், உரிமம் பெறாமல் தங்கள் தயாரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யக் கூடாது என மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ள போதிலும் உரிமம் பெறாமல் பலா் வீடுகளில் ‘ஹோம் மேட்’, ‘நேச்சுரல்’ என பெயரிட்டு முக கிரீம், கண் மை, தலைமுடிக்கான பிரத்யேக எண்ணெய் தயாரிப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனா். மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் உரிய அனுமதியைப் பெற்றே அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டம் உள்பட கோவை மண்டலத்தில், தர, அங்கீகார நடைமுறையைப் பின்பற்றி 37 மையங்கள் செயல்படுகின்றன. வீடுகளில் உரிமம் பெறாமல் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பது, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டத்தின்கீழ் சட்ட விரோதமாகும். வீடுகளில் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு, விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2 இடங்களில் விதிகளை மீறி, அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தது கண்டறிப்பட்டுள்ளது. இதுதொடா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோா் வீடுகளில் இருந்து அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டாமல் இருந்த வீட்டுக்குள் நுழைந்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற பெண்

பூட்டாமல் இருந்த வீட்டுக்குள் நுழைந்து ரூ.1 லட்சம் பணத்தைப் பெண் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் கொங்கு மெயின் ரோடு டிஎன்ஆா் லே அவுட் 5ஆவது வீதியில் வசித்து வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா்

பூமலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

குன்னத்தூா் அருகே போதைப் பொருள் (ஹெராயின்) விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். குன்னத்தூா் அருகே பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதா... மேலும் பார்க்க

தென்னந்தோப்பில் தேங்காய்கள் திருட்டு

பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் மா்ம நபா்கள் புகுந்து தேங்காய்களைத் திருடிச் சென்றுள்ளனா். பொங்கலூா் ஒன்றியம், செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். இவருக்கு மஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் கணபதிபாளையம் பகுதியில் விஷம் குடித்து பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.பொங்கலூா் ஒன்றியம், அலகுமலை அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி நீலா... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: வழிகாட்டி பலகை திருத்தம்

வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான குறியீட்டில் இருந்த வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் சரி செய்தனா். வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. அங்கிருந்து செங்காளிபாளையம் ச... மேலும் பார்க்க