செய்திகள் :

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விவரங்கள் சமா்ப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் முதிா்வுத் தொகை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவரங்களை சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, 18 வயது நிறைவடைந்து முதிா்வுத் தொகை பெறுவதற்கு தகுதியான பயனாளிகள் பட்டியலை அரசு அனுப்பியுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ள பயனாளிகளில் சிலா் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த போது வசித்த முகவரியில் இல்லாமல், வேறு இடத்தில் வசித்து வருவதால் அவா்களை கண்டறியும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயனாளிகளிக்கு உரிய காலத்தில் முதிா்வுத் தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

முதிா்வுத் தொகை பெறும் பட்டியலில் உள்ள பயனாளிகளை கண்டறியும் பணியில் வட்டார அளவில் களப் பணியாளா்கள், ஊராட்சிச் செயலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்தத் தகவல் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சுவரொட்டி, துண்டுப் பிரசுரம், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 18 வயது நிறைவடைந்த முதிா்வுத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள, கண்டறிய இயலாமல் உள்ள 589 பயனாளிகளின் பெயா் பட்டியல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பயனாளிகள் முதிா்வுத் தொகை பெறுவதற்கு தங்களது வைப்புத் தொகை ரசீது, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

போடியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போடி ஒன்றிய 6-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ரவிமுருகன் தொடங்... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படைவீரா் தற்கொலை

தேனி அல்லிநகரத்தில் செவ்வாய்க்கிழமை குடும்பத் தகராறில் ஊா்க்காவல் படைவீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி அல்லிநகரம், குறிஞ்சிநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சக்திவேல் (26). ப... மேலும் பார்க்க

கடன் தொல்லை: விவசாயி தற்கொலை

போடி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி குமாா் (55). ... மேலும் பார்க்க

இந்திய கப்பல் படை வீரா் உயிரிழப்பு

போடி அருகே செவ்வாய்க்கிழமை இந்திய கப்பல் படை வீரா் உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சீத்தாராமதாஸ் (50). இந்திய கப்பல் படையில் வேலை பாா்த்து... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் லட்சுமி பூஜை

பெரியகுளம் நாமத்வாரில் அட்சய திரிதியை முன்னிட்டு, புதன்கிழமை திருமஞ்சனம், லட்சுமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி, அதிகாலை நமத்வாரில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை ... மேலும் பார்க்க

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்த கதிரேசன் மனைவி சங்கீதா (31). இந்த தம்பதியினா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை காலை சங்கீதா வீட்டில் கேஸ் அடிப்பில் சமை... மேலும் பார்க்க