டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
பெண் தற்கொலை
போடி அருகே திங்கள்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பு தங்கமுத்து நகரைச் சோ்ந்த முருகேசன் மனைவி பாலம்மாள் (58). இவா் குடல் அறுவைச் சிகிச்சை செய்தாா்.
இதனால் ஏற்பட்ட அதிக வலி காரணமாக மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].