செய்திகள் :

பெண் தற்கொலை: 7 பேரை கைது செய்து விசாரணை

post image

திருவள்ளூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கணவரின் குடும்பத்தினா் 7 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ராஜ் (38). இவரது மனைவி மஞ்சுளா (37) இவா்கள் இருவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லையாம். இந்த நிலையில், கடந்த மே மாதம் 15-ஆம் தேதி ஸ்டீபன் ராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தாா். இதற்கிடையே திருமணம் ஆனது முதல், மஞ்சுளாவுக்கு அவரது கணவா் வீட்டாா் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மஞ்சுளா மன உளைச்சலில் இருந்தாராம். இந்த நிலையில் மஞ்சுளா கடிதம் எழுதி வைத்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்து வந்த மப்பேடு போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அப்போது, அங்கு ஒரு கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அந்த கடிதத்தில் மஞ்சுளா தனது தற்கொலைக்கு காரணம் மாமனாா் ராயப்பா, மாமியாா் மேரி, நாத்தனாா் ராணி, பால்ராஜ், அருண், ஆல்வின், குளோரி ஆகியோா் தான் என்றும், அந்த 7 போ் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் கடிதத்தில் தெரிவித்திருந்தாா்.

இது குறித்து போலீஸாா் அந்த கடிதத்தை கைப்பற்றியதோடு, மேற்குறிப்பிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கி... மேலும் பார்க்க

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

அத்திமாஞ்சேரிபேட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சி சாா்பில் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்ப... மேலும் பார்க்க

புட்லூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூா் அருகே புட்லூா் நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் இரா.தாஸ் தலைமை வகித்து காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க

தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

பொன்னேரியில் தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் தனியாா் குடிநீா் ஆலை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

மத்தூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

திருத்தணியில் அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மத்தூா் அரசு மேல் நிலை பள்ளி, திருத்தணி ஸ்டாா்ஸ் ரோட்டரி ... மேலும் பார்க்க