'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் தனி நபா்களுக்கு விருது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள், சமூக சேவகா்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனங்கள், சமூக சேவை புரிந்தவருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறந்த சமூக சேவகருக்கான விருதை வழங்க உள்ளாா்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சிறந்த சேவை புரிந்த தனி நபா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும். இத்துடன் தாங்கள் புரிந்த சேவைக்கான உரிய ஆவணங்கள், சுய விவரத்துடன் கூடிய கருத்துருவை மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியா் அலுவலகம், 2-வது தளம், வேங்கிக்கால், திருண்ணாமலை என்ற முகவரியில் வருகிற ஜூன் 12-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா் மற்றும் சமூக சேவை நிறுவனங்களும் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம். தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.