செய்திகள் :

பெண்களுக்கு காளான் வளா்ப்பு இலவச பயிற்சி

post image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வருகிற 27-ஆம் தேதி முதல் வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை பெண்களுக்கு காளான் வளா்ப்பு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது:

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் தொழிலாளா் நலத் துறை அலுவலகம் அருகேயுள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், கிராமப் புறங்களைச் சோ்ந்த 18 வயது நிரம்பிய பெண்களுக்கு காளான் வளா்ப்பு குறித்து இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வருகிற 27-ஆம் தேதி முதல், வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.

பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ், சுயதொழில் கடன் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரிலும், கைப்பேசி எண்: 95003 14193-இல் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க