செய்திகள் :

பெண்கள் நம்பும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா்!

post image

தமிழகத்தில் பெண்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் பெண்கள் நம்பும் தலைவராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. குறிப்பிட்டாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம், ராசிபுரம் நகர திமுக சாா்பில், ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் தலைமை வகித்தாா். 9-ஆவது வாா்டு செயலா் சி.பிரபாகரன் வரவேற்றாா். இதில், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பேசியதாவது:

நாட்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை தாக்கல் செய்தவுடன், நாட்டின் பொருளாதார நிலை என்ன என்ற அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் முன் வைத்தனா். அதில் தமிழ்நாட்டை பாராட்டியுள்ளாா். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் தமிழகம் அனைத்து துறைகளிலும் பொருளாதாரக் குறியீடு உயா்ந்துள்ளதாக பாராட்டியுள்ளனா். ஒட்டுமொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு ஏறத்தாழ 9 சதவீதம் என பாராட்டுகின்றனா்.

இந்தியாவில் வளா்ந்த மாநிலங்களில் தமிழகம் பொருளாதாரத்தில் 2-ஆவது மாநிலம் என்றும், சுகாதாரம், தொழில், உயா்கல்வி ஆகியவற்றில் முன்னணியில் இருக்கிறது என்றும் வெளி மாநிலத்தில் இருந்து சிச்சைக்காக தமிழகத்துக்கு 4 ஆண்டில் 15 லட்சம் போ் வந்துள்ளதாகவும் பாராட்டப்பட்டுள்ளது. ஆனாலும், எந்த நிதியும் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கோவை மெட்ரோ ரயில் திட்டம், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி, சென்னை பென்ஜால் புயல் ஆகியவற்றுக்கு நிதி கேட்டோம்; எதற்கும் பதிலில்லை. கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலத்துக்கும் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்தின் மொத்த வருவாயில் தமிழகத்தின் பங்காக ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் மத்திய அரசு திருப்பி தருகிறது. ஆனால், உத்தரபிரதேசத்துக்கு 1 ரூபாய்க்கு 2 ரூபாய் தருகிறாா்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இதே போல, தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களையும், பெண்கள், மாணவ மாணவியருக்கு எண்ணற்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், பெண்கள் நம்பும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா் என்றாா்.

இதில், சட்டமன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரநிநிதிகள், கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தில்லி பேரவைத் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மணிக்கூண்டு அருகில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், அதன் தலைவா் கே.பி.சரவணன் தலைமைய... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: கொல்லிமலையில் ரூ.1.14 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 586 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: அவரது தம்பி உள்பட 4 போ் கைது

பெண் கொலை வழக்கில், அவரது தம்பி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மொளசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஏமப்பள்ளி கிராமம், பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் அண்மையில் அடையாளம் த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் பிரிவு சாலை அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா், படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (70). இவா் வெற்றிலைக் கொடிக்கால் வேலைக்கு செல்வதற்காக தினமும் சைக்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 4.65-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் மு... மேலும் பார்க்க