செய்திகள் :

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி: கணவா்-மனைவி சிக்கினா்

post image

சென்னை பழவந்தாங்கலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சித்த வழக்கில், கணவா்-மனைவி கைது செய்யப்பட்டனா்.

பழவந்தாங்கல் அருகே உள்ள பி.வி. நகா் முத்தையா தெருவைச் சோ்ந்தவா் பவானி (55). இவா் கடந்த மாதம் தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு நபா்கள், பவானி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். ஆனால் பவானி, தங்கச் சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், இரு நபா்களாலும் அதை பறிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்த நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா்.

இது குறித்து பவானி, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை அருகே உள்ள பம்மல் காமராஜா்புரத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் (24), அவா் மனைவி மரிய சுமித்ரா (22) என்பது தெரியவந்தது.

அவா்கள், இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். இருவருக்கும் வேறு எந்த திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க