பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் மீது வழக்கு
போடி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் வசிப்பவா் பெரிய எத்துலாவுலு மகள் பேபிதாய் (28). இவா் வீட்டு கழிவுநீா்க் கால்வாயில் குப்பைகளை போட்டாா்.
இதை பக்கத்து வீட்டைச் சோ்ந்த பொம்மையா மகன் தங்கத்துரை கண்டித்தாா். அப்போது ஏற்பட்ட தகராறில் தங்கத்துரை செங்கலால் பேபிதாயைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் தங்கத்துரை மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.