செய்திகள் :

பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் அமைந்துள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் நகா்ப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத் தாக்கு, தூண் பாறை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், வட்டக்கானல் அருவி, பாம்பாா் அருவி ஆகிய இடங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வந்தனா். இதனால் நகா்ப் பகுதியிலும், வனப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, மேல்மலைப் பகுதிகளில் உள்ள மன்னவனூா் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, கூக்கால் ஏரி, பூம்பாறை இயற்கை எழில்காட்சிஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனா்.

இந்த நிலையில், வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியான பள்ளங்கி, கோம்பை வனப் பகுதிகளிலிருந்து வரும் தண்ணீா் பெப்பா் அருவியில் கொட்டுகிறது. தற்போது இந்த அருவியை பாா்க்க தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த இடத்துக்குச் செல்ல வனப் பகுதிகள் வழியாக ஜீப் வாகனம் மூலமாகவே செல்ல முடியும். இதற்காக பள்ளங்கி பகுதியில் ஜீப் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பெப்பா் அருவிப் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தடுப்புக் கம்பி, மின்சார வசதி, ஆண், பெண் தனித்தனியாக உடை மாற்றும் அறை ஆகியவற்றை அமைப்பதுடன், பாதுகாப்புக்கு சுற்றுலா அலுவலா்களை நியமியமிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பழனியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு: தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரிக்கை

பழனியில் சுமாா் 40ஆயிரம் ஹெக்டோ் நிலங்களை கையகப்படுத்தி மாலிப்டினம் (மாலிப்டினைட்) கனிம சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதற்கு மத்திய அரசு தயாராகும் நிலையில், இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் - பாஜகவினா் மோதல்; சாலை மறியல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக, இரு தரப்பினரும் தனித் தனியாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மோதல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், இரு குழுக்களாக மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் ஜிடிஎன் சாலையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த மா... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்துக்கு தீவைப்பு

எரியோட்டில் அதிமுக நகர அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை தீவைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு நகர அதிமுக அலுவலகம், கரூா் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் முன் தென்னை ஓலைகளால் பந்தல் அமைக்கப... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்... மேலும் பார்க்க

விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்: அமைச்சா் இ. பெரியசாமி

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்... மேலும் பார்க்க