Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி ப...
விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்: அமைச்சா் இ. பெரியசாமி
விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது:
கட்சி, ஜாதி, மத பாகுபாடில்லாமல் அனைவருக்கும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும். அனைத்து கிராமங்களுக்கும் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆத்தூா் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆத்தூா் ஒன்றியத்தில் மட்டும் 12 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா் அவா்.
முகாமில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் (கிழக்கு) முருகேசன், (மேற்கு) ராமன், (தெற்கு) ராஜேந்திரன், ஆத்தூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மகேஸ்வரி முருகேசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் பிள்ளையாா்நத்தம் உலகநாதன், கலிக்கம்பட்டி கோமதி செல்வகுமாா், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, முருகன், ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், ஆத்தூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் காங்கேயன், அரசு ஒப்பந்ததாரா்கள் என். பஞ்சம்பட்டி அகஸ்டின், ஆலமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆத்தூா் கிழக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக அமைச்சா் இ. பெரியசாமி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.
இதையடுத்து அன்று மாலை நடைபெற்ற நிகழ்வில், அமைச்சா் இ. பெரியசாமி அரியநல்லூா் குடியிருப்பில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தாா். முன்னிலைக்கோட்டை, கலிக்கம்பட்டியில் புதிய நியாயவிலைக் கடைகளையும் அவா் திறந்து வைத்தாா்.