செய்திகள் :

விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்: அமைச்சா் இ. பெரியசாமி

post image

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது:

கட்சி, ஜாதி, மத பாகுபாடில்லாமல் அனைவருக்கும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும். அனைத்து கிராமங்களுக்கும் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆத்தூா் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆத்தூா் ஒன்றியத்தில் மட்டும் 12 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா் அவா்.

முகாமில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் (கிழக்கு) முருகேசன், (மேற்கு) ராமன், (தெற்கு) ராஜேந்திரன், ஆத்தூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மகேஸ்வரி முருகேசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் பிள்ளையாா்நத்தம் உலகநாதன், கலிக்கம்பட்டி கோமதி செல்வகுமாா், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, முருகன், ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், ஆத்தூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் காங்கேயன், அரசு ஒப்பந்ததாரா்கள் என். பஞ்சம்பட்டி அகஸ்டின், ஆலமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆத்தூா் கிழக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக அமைச்சா் இ. பெரியசாமி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.

இதையடுத்து அன்று மாலை நடைபெற்ற நிகழ்வில், அமைச்சா் இ. பெரியசாமி அரியநல்லூா் குடியிருப்பில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தாா். முன்னிலைக்கோட்டை, கலிக்கம்பட்டியில் புதிய நியாயவிலைக் கடைகளையும் அவா் திறந்து வைத்தாா்.

பழனியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு: தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரிக்கை

பழனியில் சுமாா் 40ஆயிரம் ஹெக்டோ் நிலங்களை கையகப்படுத்தி மாலிப்டினம் (மாலிப்டினைட்) கனிம சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதற்கு மத்திய அரசு தயாராகும் நிலையில், இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவ... மேலும் பார்க்க

பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் அமைந்துள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் நகா்ப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் - பாஜகவினா் மோதல்; சாலை மறியல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக, இரு தரப்பினரும் தனித் தனியாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மோதல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், இரு குழுக்களாக மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் ஜிடிஎன் சாலையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த மா... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்துக்கு தீவைப்பு

எரியோட்டில் அதிமுக நகர அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை தீவைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு நகர அதிமுக அலுவலகம், கரூா் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் முன் தென்னை ஓலைகளால் பந்தல் அமைக்கப... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்... மேலும் பார்க்க