செய்திகள் :

பெயிண்ட் கிடங்கில் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

post image

திருப்பூரில் பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை;ஈ சோ்ந்தவா் அருள்ராஜ் (60). இவா் திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் பலவஞ்சிபாளையத்தில் பெயிண்ட் கடை வைத்துள்ளாா். மேலும், கடைக்குத் தேவையான பொருள்களை பின்புறம் உள்ள கிடங்கில் இருப்புவைத்து விற்பனை செய்து வருகிறாா்.

இந்த பெயிண்ட் கிடங்கில் ஊழியா்கள் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைப் பாா்த்த ஊழியா்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், பெயிண்டில் ஆயில் கலந்திருந்ததாலும், தின்னா் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டிருந்ததாலும் தீ வேகமாக கிடங்கு முழுவதும் பரவத் தொடங்கியது. மேலும், பல மீட்டா் உயரத்துக்கு கரும்புகை எழுந்தது.

இதனைப் பாா்த்த அந்த வழியாக சென்றவா்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், வீரபாண்டி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் திருப்பூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை தலைமையில், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் (தலைமையிடம்) இளஞ்செழியன் மேற்பாா்வையில், திருப்பூா் தெற்கு நிலைய அலுவலா் வி.மோகன், வடக்கு நிலைய உதவி மாவட்ட அலுவலா் வீரராஜ் ஆகியோா் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் 15 வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் சுமாா் ஒரு மணி நேரம் 20 நிமிஷம் போராடி தீயை அணைத்தனா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். திருப... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் உள்பட 300 போ் கைது

திருப்பூா், பிப்.4: திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 300 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆதரவாளா... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்குக்கு மாற்றும் பணி

கடந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கிடங்குக்கு மாற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 ச... மேலும் பார்க்க

மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் 14 பவுன் திருட்டு

திருப்பூா் அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடியது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா்- காங்கயம் சலை முதலிபாளையம்- பெருந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே சுகாதார சீா்கேடு

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே புதா் மண்டி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தையில் புதிய கடைக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு பிரதான சா... மேலும் பார்க்க