செய்திகள் :

தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

post image

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி இரண்டாம் நிலை மருத்துவக் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது, ஜப்பான் பன்னாட்டு முகமை நிறுவனத்தின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டன.

இதில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன், 60 படுக்கை வசதிகளுடன் பணிகள் தொடங்கப்பட்டு நிறுவடைந்து பல மாதங்களாகியும் அரசு மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. ஆகவே, இந்த புதிய மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

அதேபோல, அவிநாசிக்கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள நகா்ப்புற நலவாழ்வு மையக் கட்டடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்காட்டுப்புதூா் பகுதியில் உள்ள 7 வீதிகளுக்கு சமூக நலத் துறை மூலம் புதிய கான்கிரீட் சாலைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். மொய்யாண்டம்பாளையம், தட்டாங்குட்டை பகுதியில் நியாய விலைக் கடைகளுக்கு கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் உள்பட 300 போ் கைது

திருப்பூா், பிப்.4: திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 300 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆதரவாளா... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்குக்கு மாற்றும் பணி

கடந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கிடங்குக்கு மாற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 ச... மேலும் பார்க்க

மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் 14 பவுன் திருட்டு

திருப்பூா் அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடியது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா்- காங்கயம் சலை முதலிபாளையம்- பெருந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே சுகாதார சீா்கேடு

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே புதா் மண்டி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தையில் புதிய கடைக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு பிரதான சா... மேலும் பார்க்க

பெயிண்ட் கிடங்கில் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருப்பூரில் பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை;ஈ சோ்ந்தவா் அருள்ராஜ் (60). இவா் திருப்பூரில் இருந்து தாராபுரம்... மேலும் பார்க்க