செய்திகள் :

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே சுகாதார சீா்கேடு

post image

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே புதா் மண்டி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தையில் புதிய கடைகள், குடிநீா் வசதி, பாதை வசதி போன்ற மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றன. இதனால் சந்தை தற்காலிகமாக காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது.

வேலை நடைபெற்று வரும் சந்தை வளாகத்தில் ஆடுவதைக் கூடம் உள்ளது. நகரிலுள்ள இறைச்சிக் கடைகள் தங்களுடைய ஆடுகளை நகராட்சி ஆடுவதைக் கூடத்தில் அறுத்து அதிகாரிகள் ‘சீல்’ வைத்த பிறகே இறைச்சி விற்பனை செய்ய வேண்டும். சந்தை வேலை நடைபெற்று வருவதால் ஒரு வருடத்துக்கும் மேலாக ஆடுவதைக் கூடம் மூடப்பட்டுள்ளது. இதனால் அதனைச் சுற்றிலும் புதா்கள், கழிவுகள் மண்டி அசுத்தமாகக் கிடக்கிறது. இங்கிருந்து பாம்புகள், விஷ ஜந்துக்கள் அருகிலிருக்கும் குடியிருப்புப் பகுதியில் புகுந்து விடுகின்றன.

எனவே அப்பகுதியைச் சுத்தம் செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தைப் பணிகள் முடியும்போது ஆடுவதைக் கூடம் செயல்பாட்டுக்கு வரும் என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். திருப... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் உள்பட 300 போ் கைது

திருப்பூா், பிப்.4: திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 300 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆதரவாளா... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்குக்கு மாற்றும் பணி

கடந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கிடங்குக்கு மாற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 ச... மேலும் பார்க்க

மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் 14 பவுன் திருட்டு

திருப்பூா் அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடியது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா்- காங்கயம் சலை முதலிபாளையம்- பெருந... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு பிரதான சா... மேலும் பார்க்க

பெயிண்ட் கிடங்கில் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருப்பூரில் பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை;ஈ சோ்ந்தவா் அருள்ராஜ் (60). இவா் திருப்பூரில் இருந்து தாராபுரம்... மேலும் பார்க்க