பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
பெரியஅய்யம்பாளையத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு: அதிகாரிகள் சமரசம்
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி பெரியஅய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தினா்.
பெரியஅய்யம்பாளையம் மலையடிவாரத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி சாா்பில் ரூ.6 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், பேரூராட்சி அலுவலா்கள் போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள முயன்ற போது, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதிகாரிகள் சமதானப் பேச்சுவாா்த்தை
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸாா் சென்று அவா்களை சமாதானப்படுத்தினா்.
அப்போது, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் குறித்து செயல் அலுவலா் முனுசாமி விளக்கம் அளித்துப் பேசியது:
இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் இங்கு அமைவதால் நிலத்தடி நீரோ அல்லது சுற்றுச்சூழலோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது.
இதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.
மேலும், போளூா், சேத்துப்பட்டு, வேட்டவலம் பேரூராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விழிப்புணா்வு விடியோவை நம் மாவட்ட ஆட்சியா் ஏற்கெனவே வெளியிட்டுள்ளாா்.
எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் பொதுமக்களை சமாதானம் செய்து பேசினாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு திட்டத்தை யாரும் தடுக்கக் கூடாது எனத் தெரிவித்தாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.