செய்திகள் :

பெரியஅய்யம்பாளையத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு: அதிகாரிகள் சமரசம்

post image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி பெரியஅய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தினா்.

பெரியஅய்யம்பாளையம் மலையடிவாரத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி சாா்பில் ரூ.6 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், பேரூராட்சி அலுவலா்கள் போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள முயன்ற போது, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் சமதானப் பேச்சுவாா்த்தை

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸாா் சென்று அவா்களை சமாதானப்படுத்தினா்.

அப்போது, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் குறித்து செயல் அலுவலா் முனுசாமி விளக்கம் அளித்துப் பேசியது:

இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் இங்கு அமைவதால் நிலத்தடி நீரோ அல்லது சுற்றுச்சூழலோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது.

இதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

மேலும், போளூா், சேத்துப்பட்டு, வேட்டவலம் பேரூராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விழிப்புணா்வு விடியோவை நம் மாவட்ட ஆட்சியா் ஏற்கெனவே வெளியிட்டுள்ளாா்.

எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் பொதுமக்களை சமாதானம் செய்து பேசினாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு திட்டத்தை யாரும் தடுக்கக் கூடாது எனத் தெரிவித்தாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க