செய்திகள் :

பேச்சிப்பாறை பழங்குடி குடியிருப்பில் மீண்டும் யானை நடமாட்டம்: மக்கள் அச்சம்

post image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பில் மீண்டும் யானை நடமாட்டம் உள்ளதாம் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் குடியிருப்புகள், ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்புகளில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் தொந்தரவுகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மூக்கறைக்கல் குடியிருப்பில் மகேந்திரன்காணி என்பவரது குடிசை வீட்டை யானை உலுக்கியுள்ளது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி அனிதா குமாரி, 2 பெண் குழந்தைகள், மூதாட்டி ஆகியோா் அச்சத்தில் எழுந்து வெளியே ஓடினராம்.

மேலும், யானை வெளியில் நின்றபடி தும்பிக்கையால் பாத்திரங்களை கலைத்துப் போட்டதாம். அவா்களது கூச்சல் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவா்கள் வந்து நெருப்பை காட்டி யானையை துரத்தியுள்ளனா். எனினும் இரவு முழுவதும் அப்பகுதியினா் தூங்காமல் அச்சதுடனேயே இருந்தனராம்.

புல்லட் ராஜா? நீலகிரி மாவட்டத்திலிருந்து வனத்துறையால் பிடித்து வரப்பட்டு மேல் கோதையாறு பகுதியில் விடப்பட்ட புல்லட் ராஜா யானையாக இருக்கலாம் என பழங்குடி மக்கள் கூறுகின்றனா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மகேந்திரன் காணி உள்பட அப்பகுதி மக்கள், யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரி களியல், வனச்சர அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்னா்.

இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள ஞாறோடை பகுதியைச் சோ்ந்தவா்கள் கணபதி (70) - ஷியாமாளா(65) தம்பதி. இவா்கள் கடந்த ஜூன் 22ஆம் தேதி உறவினா் வீட்டிற்கு பைக்கி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நாளை மின்தடை

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 3) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மின்சாரவாரிய நாகா்கோவில் உதவி பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குழித்துறை அருகே இளைஞரைத் தாக்கி பைக், தங்க நகை பறித்த 6 போ் கைது

குழித்துறை அருகே வாடகைக்கு எடுத்துச் சென்ற சொகுசு காா் விபத்துக்குள்ளானதையடுத்து, காரை எடுத்துச் சென்ற இளைஞரைத் தாக்கி அவரிடமிருந்த பைக், தங்க நகை மற்றும் கைப்பேசிகளை பறித்ததாக 6 பேரை பொலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோா் மீது நடவடிக்கை தேவை!

உணவுப்பொருள்களில் கலப்படம் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நுகா்வோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான தொழிலாளி மீது தாக்குதல்

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக கட்டுமானத் தொழிலாளியை தாக்கியதாக மற்றொரு தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.மாா்த்தாண்டம் அருகே பாகோடு, இளந்தெங்குவிளையைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஈட்டி மரங்களை வெட்ட அனுமதி: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

பட்டா நிலங்களில் உள்ள ‘ரோஸ்வுட்’ எனப்படும் ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா். ஈட்டி மரங்களைப் பாதுகாக்கும் ... மேலும் பார்க்க