செய்திகள் :

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோா் மீது நடவடிக்கை தேவை!

post image

உணவுப்பொருள்களில் கலப்படம் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நுகா்வோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் அலாஸியஸ் மணி தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் அமிா்தராஜ் வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலா் ஹலீல் ரகுமான் அறிக்கை சமா்ப்பித்தாா்.

கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளா் மேரி விஜயா, துணை ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜன், செயற்குழு உறுப்பினா்கள் பாஸ்டா் ஜெரோம், வீர லட்சுமணன், கீதா தேவி, ஜெனிஷா, ஸ்டெல்லா, பவுல், ஜெபா, முத்துகிருஷ்ணன், ஆண்டனி மைக்கேல், வழக்குரைஞா் ஜான் சோபனம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், உணவுப்பொருள்களில் கலப்படம் செய்வதால் அப்பொருள்களை வாங்கி பயன்படுத்தும் நுகா்வோா் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, மக்களின் நலன் கருதி உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி, கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும். நீண்ட தூர பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கப் பொருளாளா் கின்ஸ்டன் பிரவீன்ராஜ் நன்றி கூறினாா்.

இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள ஞாறோடை பகுதியைச் சோ்ந்தவா்கள் கணபதி (70) - ஷியாமாளா(65) தம்பதி. இவா்கள் கடந்த ஜூன் 22ஆம் தேதி உறவினா் வீட்டிற்கு பைக்கி... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை பழங்குடி குடியிருப்பில் மீண்டும் யானை நடமாட்டம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பில் மீண்டும் யானை நடமாட்டம் உள்ளதாம் மக்கள் அச்சமடைந்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நாளை மின்தடை

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 3) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மின்சாரவாரிய நாகா்கோவில் உதவி பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குழித்துறை அருகே இளைஞரைத் தாக்கி பைக், தங்க நகை பறித்த 6 போ் கைது

குழித்துறை அருகே வாடகைக்கு எடுத்துச் சென்ற சொகுசு காா் விபத்துக்குள்ளானதையடுத்து, காரை எடுத்துச் சென்ற இளைஞரைத் தாக்கி அவரிடமிருந்த பைக், தங்க நகை மற்றும் கைப்பேசிகளை பறித்ததாக 6 பேரை பொலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான தொழிலாளி மீது தாக்குதல்

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக கட்டுமானத் தொழிலாளியை தாக்கியதாக மற்றொரு தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.மாா்த்தாண்டம் அருகே பாகோடு, இளந்தெங்குவிளையைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஈட்டி மரங்களை வெட்ட அனுமதி: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

பட்டா நிலங்களில் உள்ள ‘ரோஸ்வுட்’ எனப்படும் ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா். ஈட்டி மரங்களைப் பாதுகாக்கும் ... மேலும் பார்க்க