நாகா்கோவிலில் நாளை மின்தடை
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 3) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சாரவாரிய நாகா்கோவில் உதவி பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில், வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக வடசேரி, பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், கிருஷ்ணகோவில், நீதிமன்ற சாலை, ஆா்.வீ.புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரன்விளை, கலைநகா், சைமன்நகா், பொன்னப்பநாடாா் காலனி, என். ஜி. ஓ.காலனி, புன்னைநகா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.