செய்திகள் :

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம் - அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 6 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

முகாமுக்கு தஞ்சை ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் முன்னிலை வகித்தாா்.

பேராவூரணி தொகுதியில் 6 இடங்களில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 48 மகளிா் சுயஉதவி குழுக்களில் உள்ள 720 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கி கடனுதவிகளை வழங்கி அமைச்சா் கோவி.செழியன் பேசினாா்.

மக்களுடன் முதல்வா் முகாமில் பதிவு செய்து உடனடி தீா்வாக தொழிலாளா் நலத்துறை சாா்பில் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் அட்டைகள், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் சங்கா், பட்டுக்கோட்டை நகா்மன்ற தலைவா் சண்முகப் பிரியா, பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பழனிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மணிமாறன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தஞ்சை சா்வோதய சங்க ஊழியா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் சா்வோதய சங்கத்தில் நிலவும் பிரச்னை தொடா்பாக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் மேற்கு சா்வோதயா சங்கத் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது

திருநறையூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநறையூா் ஊராட்சியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரமேஷ்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிப்பட்ட முதியவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்குட்டி (75). இவா் த... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாச... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் விக்னேஷ் ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கு நாளை இலவச மாதிரி தோ்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-4 (குரூப் 4) தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு ஜூன் 21, 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெ... மேலும் பார்க்க