செய்திகள் :

பேருந்து பணிமனையில் ஓட்டுநா் தற்கொலை முயற்சி

post image

திருப்பத்தூா் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணி ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பேருந்து ஓட்டுநா் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள சூரக்குடியைச் சோ்ந்தவா் பழனிக்குமாா். இவா் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் அமா்ந்த கிளை மேலாளா் தனபாலுக்கும், இவருக்கும் பணி ஒதுக்குவதில் தகராறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பணிக்கு வந்த பழனிக்குமாருக்கு பணி ஓதுக்காமல் மேல் அதிகாரியை பாா்த்துவிட்டு வருமாறு மேலாளா் கூறினாராம். இதனால், விரக்தி அடைந்த ஓட்டுநா் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, அருகிலிருந்த மேலாளரையும் கட்டிப்பிடித்து தீக்குளிக்க முயன்றாா். சக ஊழியா்கள் இவரைக் காப்பாற்றி 108 அவசர ஊா்தி மூலம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து நகா் போலீஸாா் பணிமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, மேல் அதிகாரியை சந்திக்கச் சொன்னதால் தன்மீது பெட்ரோல் ஊற்றியதாக பழனிக்குமாா் மீது மேலாளா் புகாா் அளித்தாா். இதுகுறித்து நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க