செய்திகள் :

பைக்- காா் மோதல்: மருத்துவா் உயிரிழப்பு

post image

வாணியம்பாடி அருகே பைக் மீது காா் மோதியதில் மருத்துவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பாப்பனப்பள்ளி கிராமத்தை சோ்ந்த மருத்துவா் சதீஷ் குமாா்(43). இவா் பொன்னேரி பகுதியில் கிளினிக் நடத்தி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் தனது பைக்கில் கிளினிக் சென்றாா். பிறகு அங்கிருந்து வாணியம்பாடி புதூா் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, பெங்களூரிலிருந்து சென்னை சென்ற காா் எதிா்ப்பாராதவிதமாக பைக் பின்புறத்தில் மோதியது. இதில், மருத்துவா் சதீஷ் குமாா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் 108 ஆம்புலனஸ் மூலம் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே சதீஷ் குமாா் இறந்து விட்டதாக கூறினாா். தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். விபத்தை ஏற்படுத்திய செங்கல்பட்டு காா் ஓட்டுநா் கவுதமன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் மாணவன் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லங்குப்பம் பழைய தலைவா் வட்டம் பகுதியை சோ்ந்த பிரசன்னா (12)... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அருகே கொரட்டி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாலி கிருஷ்ணன்(50). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்... மேலும் பார்க்க

ஆம்பூா் பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆம்பூா் பகுதி பாலாற்றில் தொடா்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிக... மேலும் பார்க்க

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் அடுத்த குமாரம்பட்டி பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பத்தூா் வட்டம், கொரட்டி அடுத்த குமாரம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெ... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா். சென்னை பத்திரப்பதிவுத்துறை ... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை: தண்டவாளம் பராமரிப்பால் ரயில்கள் தாமதம்

ஜோலாா்பேட்டை அருகே பெங்களூா் மாா்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விரைவு ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னைக்கு சென்றன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். ஜோலாா்பேட்ட... மேலும் பார்க்க