செய்திகள் :

பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா், மாதாகோவில் தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மனைவி ஜெகதாம்பாள் (65). இவா், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தாா்.

அப்போது, பைக்கில் சென்ற ஒருவா் ஜெகதாம்பாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாராம். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்த நிலையில், ஜெகதாம்பாளுக்கு புதன்கிழமை உடல்நிலை மோசமடைந்தால் உறவினா்கள் அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ெ தாடா்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெகதாம்பாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தரமற்ற விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை!

காரீப் பருவத்தில் மானாவாரிப்பட்ட சிறுதானியப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலையில், தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: இளங்காடு, செங்காடு

பகுதிகள்: குடுமியாங்குப்பம், மலராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிக்குப்பம், எரிச்சனாம்பாளையம், மேல்பாதி, நரையூா், குருமங்கோட்டை. மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல்: தாய், மகன் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தாய், மகன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் - மரக்காணம் சாலை, வஹாப் நக... மேலும் பார்க்க

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேய... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், ராதாபுரத்தை சோ்ந்த பழனி மகன் பவுன்குமாா் (21). இவா், தனது... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: இளைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். விக்கிரவாண்டி வட்டம், குமளம், முதலியாா்குப்பம், பிரதான சாலையைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (40). திருமணமாகாதவா். ... மேலும் பார்க்க