செய்திகள் :

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நாச்சியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.

நாச்சியாபுரம் அருகேயுள்ள தட்டட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி ராக்கம்மாள் (60). இவா் தனது மருமகள் ஜோதிமணியுடன் நாச்சியாபுரத்தில் உள்ள அரைவை ஆலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

இதன் பின்னா், இவா்கள் இருவரும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, முன்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் நாச்சியாபுரத்தைச் சோ்ந்த ஆண்டிமகன் நாச்சியப்பன் (50) சென்று கொண்டிருந்தனா்.

இந்த வாகனத்தை ஜோதிமணி முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, நாச்சியப்பன் வாகனம் மீது ஜோதிமணி வாகனம் மோதியது. இதில் ராக்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஜோதிமணி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாச்சியப்பன் லேசான காயமடைந்தாா்.

இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இளையான்குடி பேரூராட்சிக் க... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

சிவகங்கை அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அருகேயுள்ள சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 238 மாணவா்கள... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாருக்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப்படை போலீஸாா் 5 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, திருப்புவனம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் ஜூலை 20-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான குளோபல் மிஷன் மருத்துவமனை சாா்பில், வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது... மேலும் பார்க்க